மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸுக்கு ஆறு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ஈசிபி) ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதாக மார்லன் சாமுவேல்ஸ் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு 2023 நவம்பர் 11 முதல் அமுலாகிறது.