Sunday, September 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என சில கட்சிகள் கோருகின்றன.

அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வினவப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக்க கொடஹேவா, தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்தார்.

மக்கள் நாட்டின் நெருக்கடிக்கும், பற்றாக்குறைகளுக்கும் தீர்வை கோருகின்றனரே தவிர, தேர்தலைக் கோரவில்லை.

எனவே இந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டதன் பின்னர், தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கலாம் என அவர் பதிலளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles