Monday, June 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்னல் தாக்கி 14 வயது சிறுவன் பலி

மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் பலி

மின்னல் தாக்கி நேற்று (22) சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்குருவாதோட்ட – படகொட பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் இருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கியதில் மயக்கமுற்ற சிறுவன் கல்பாத்த பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சடலம் கல்பாத்த பிராந்திய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles