Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறிய அதிபர் - இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறிய அதிபர் – இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் கொண்டு வந்த 7 பாடசாலை மாணவர்களை, அந்த பாடசாலையின் அதிபர், குறித்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியுள்ளதுடன், அதனை உட்கொண்ட இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11 இல் 33 மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், அதில் 7 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை ஏழு மாணவர்களும் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து, உட்கொள்ளுமாறு கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் லஞ்ச் ஷீட் மற்றும் பத்திரிக்கைகளை உட்கொண்டுள்ளனர்.

அவற்றை சாப்பிட்ட ஏழு மாணவர்களில் ஒருவர் 21 ஆம் திகதியும் மற்றுமொரு மாணவன் 22 ஆம் திகதியும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் ஒருவரின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அந்தப் பாடசாலையின் அதிபரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அம்முயற்சி கைகூடவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles