பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய 50,000 அமெரிக்க டொலர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5,000 அமெரிக்க டொலர் இன்னும் அவர்களுக்கு செலுத்தப்படவில்லை என அவர் கூறினார்.
மைதான ஊழியர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. அந்த பணம் என்ன ஆனது என அவர் வினவினார்.