கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கான பொறியியல் வடிவமைப்பு 2003 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது என்றும் அந்த திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் அனுரகுமார ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
அந்த திட்டம் இடைநடுவே ஸ்தம்பித்ததாகவும், 2008 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது, 437% ஆல் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.
முந்தைய மதிப்பீட்டை விட ஏழு மடங்காக அது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், ஐந்து வருடங்களில் இவ்வாறான அதிகரிப்பு சாத்தியமாகியிருக்காது எனவும் தெரிவித்தார்.
தற்போதைய பணவீக்கத்தில் இது சாத்தியமாக இருந்திருக்கலாம் எனவும், 2003 முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக பாரியளவு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்துகின்றார்.