Sunday, September 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'நெதுங்கமுவ ராஜா'வை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி

‘நெதுங்கமுவ ராஜா’வை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி

அண்மையில் மரணித்த ‘நெதுங்கமுவ ராஜா’ யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

நாட்டின் பிரதான விகாரைகள் பலவற்றில் பெரஹரா ஊர்வலங்களில் நெதுன்கமுவ ராஜா யானை பங்கேற்றுள்ளது.

அத்துடன், 13 தடவைகள் தலதா மாளிகையின் புனித பேழையை ஏந்திய சிறப்பு பெற்ற குறித்த யானை, கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தது.

தற்போது நெதுங்கமுவ ராஜாவின் உடலைப் பாதுகாப்பதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles