நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவித்தவர்கள் தொடர்பான தகவல் அடங்கிய கோப்புகளை ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெளிபடுத்துகிறார்.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷவின் உறவினரான ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவில் தூதரகத்தை வாங்கிய போது செய்த பண மோசடி அவரது முதல் வெளிப்பாடாகும்.
“முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அண்மையில் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கைக்கான தூதரகத்தை வாங்கும் போது அவர் பணத்தை மோசடி செய்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. நாங்கள் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த போது, ஜாலிய விக்ரமசூரிய தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர். ஜாலிய விக்ரமசூரிய வழக்கின் இறுதித் தீர்ப்பு மே மாதம் வெளியாகவுள்ளது. முழுமையான அறிக்கை எங்களிடம் உள்ளது. ”