Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் 19 நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 73,032 பேர் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 15,509 பேர் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 34,700 பேர் பதிவாகியுள்ளன, மாகாண வாரியாக அதிகபட்சமாக நவம்பர் மாதத்தில் 4,539 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் மழையினால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles