ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, அவர் சுமார் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேவியர் மில்லியை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட செர்ஜியோ மாஸா 44% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மீள எண்ணக் கோரி அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.