மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் கோப் குழுக் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.