Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்ல முயன்ற நால்வர் கைது

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்ல முயன்ற நால்வர் கைது

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – வேலணை, வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற சிறுவன் உட்பட நால்வர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles