Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு கைப்பேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று (15) அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கைப்பேசியில் கற்பிக்கும் காலப்பகுதியில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தனது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாகாண உயர்கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பெற்றோரிடம் அதிபர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles