பசறை – மில்லபெத்த பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவரை அகரத்தென விசேட அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
30 வயதுடைய சந்தேகநபர் பிடவலகம – மில்லபெத்த பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டில் மாலை 5.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரும் துப்பாக்கியும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.