தாம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் குழுவை விடுவிக்க இணக்கம் தெரிவிப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறுகிறது.
5 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டால், பணயக் கைதிகளாக உள்ள 70 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.
ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதாவினன் டெலிகிராம் கணக்கில் வெளியிட்ட குரல் பதிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 பாலஸ்தீன குழந்தைகளையும் 75 பெண்களையும் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்படும் கட்டார் அதிகாரிகளுக்கு ஹமாஸ் அறிவித்துள்ளது.