பாடசாலை நேரத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவியை தனது காதலி எனக் கூறி வெளியே அழைத்துச் சென்ற இளைஞனை அளுத்கம பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.
தர்கா நகரம்இ மிஹ்ரிபன்ன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம, தர்கா நகரில் உள்ள கலப்புப் பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவியை, பாடசாலை முடிந்து அழைத்துச் செல்வதற்காக பெற்றோர் பாடசாலைக்கு அருகில் வந்துள்ளனர்.
அப்போது, பாடசாலை முடிந்து தங்கள் மகள் வெளியே வராததை அடுத்து, இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் சற்றுநேரத்தில் குறித்த சிறுமி இளைஞர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக:கு அருகில் சென்று இறங்கியுள்ளார்.
தமது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு அருகில் கொண்டு வந்த இளைஞன் குறித்த தகவலையறிந்த பெற்றோர், அவர் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பின் பிரகாரம் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சிறுமியுடன் பல வருடங்களாக காதல் உறவில் இருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தர்கா நகரில் வசிக்கும் அவரது உறவினருக்கு சொந்தமான அளுத்கம நகரில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இருவரிடமும் நீண்ட நெர வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர்இ,சந்தேகநபரான இளைஞனை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.