‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நான்கு நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த நான்காவது பயணிகள் சொகுசு கப்பல் இதுவாகும்.
குறித்த கப்பல் 1930 பயணிகள், 953 பணியாளர்களுடன் ஓமானில் இருந்து வருகை தந்துள்ளது.
குயின் எலிசபெத் கப்பல் இன்றிரவு சிங்கப்பூர் நோக்கி புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.