காசாவின் ‘அல்-ஷிஃபா’ வைத்தியசாலைக்கு அருகில் மோதல் நடந்து வருவதனால் மருத்துவமனைக்குள் 1000 கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், அங்கு அடக்கம் செய்ய முடியாத நிலையில் அழுகிய உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து இறந்த உடல்களை உண்ணத் தொடங்கியுள்ளதாக மருத்துவமனையின் முகாமையாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் அல்-ஷிஃபா மருத்துவமனை கிட்டத்தட்ட ஒரு மயான பூமியாக மாறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.