தாம் பதவி விலகப்போவதில்லை என்பதை உறுதியாக ஜனாதிபதிக்குக் கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு வேண்டுமாக இருந்தால் பதவி விலக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முதலாம் திகதி நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இதன்போது, பிரச்சினைகளைத் தீர்க்கின்ற முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்றும், யாருக்காகவும் தாமதிக்க வேண்டாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாம் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வதாகவும், எனவே தாமாகப் பதவி விலக மாட்டேன் என்றும் பிரதமர் தெரிவித்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.