Monday, June 16, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்சுரங்கப்பாதை விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்கள்

சுரங்கப்பாதை விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்கள்

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கப்பாதை இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா – தண்டல்கான் இடையே நிர்மாணிக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் அமைப்பினர் இன்று திங்கட்கிழமையும் மீட்பு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles