Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து அவர்கள் தமிழகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும் அவர்களில் அடங்குகின்றனர்.

சேராங்கோட்டை பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளுக்காக மண்டபம் பகுதிக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இதுவரை 80 இலங்கையர்கள் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles