சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகபூர்வ மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், சில கலந்துரையாடல்கள் இணையத்தளத்திலும் இடம்பெறவுள்ளதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இரண்டு மாதங்களுக்குள் வெற்றிகரமான முடிவை எட்ட முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.