துபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு தலைவரான ‘கொஸ் மல்லி’யின் உதவியாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் ஒருவரை கொலை செய்ய சென்ற வேளையில் வாளுடன் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி தெஹிவரல ஓபன் பிளேஸில் வைத்து பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த எட்டயா மற்றும் சண்டோ ஆகிய இருவரையும் இந்த கும்பல் இலக்குவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கிசை படோவிட்ட பகுதியில் வசிக்கும் 35 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கல்கிசை திமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.