இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி இலங்கை வங்கியிலிருந்து 2 மில்லியன் டொலர்களை மீளப்பெற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை மீளப் பெற இலங்கை வங்கியை நாடியுள்ளனர்.
இது தொடர்பில் வங்கியின் முகாமையாளர் மேலிடத்தை தொடர்பு கொண்டுள்ளார். எனவே இந்த விடயம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறான ஊழல்களை செய்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட வேண்டும் என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழுள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் நிறுத்த ஜனாதிபதியுடனும் சபாநாயகருடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.