Tuesday, December 23, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்ரொபோ தாக்கியதில் ஒருவர் பலி

ரொபோ தாக்கியதில் ஒருவர் பலி

தென் கொரியாவில் ரொபோ தாக்கியதில் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரொபோவால் தாக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

40 வயதான அந்த நபர் ரொபோவை சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபரை ரொபோ பிடித்து அவரது முகம் மற்றும் மார்பை நசுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரொபோவின் பணி, மிளகு பெட்டிகளை தூக்கி தட்டுகளுக்கு மாற்றுவதாகும்.

நேற்று, இறந்த ஊழியர் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள மிளகு வரிசைப்படுத்தும் ஆலையில் பயன்படுத்துவதற்காக ரோபோவை சோதித்துக்கொண்டிருந்தார்.

அதன்படி, சோதனை ஓட்டத்திற்கு முன், அந்த ஊழியர் ரொபோவின் சென்சார் செயல்பாடுகளை சரிபார்த்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று கடந்த மார்ச் மாதம், 50 வயது தென் கொரிய நபர், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் போது, ரொபோ தாக்கியதில், பலத்த காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles