மர்மமான முறையில் உயிரிழந்த தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதி தொகையை வழங்குவதை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதிப் பணத்தை வழங்குவதை ஒருவாரம் தாமதப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ராஜசூரிய, சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.
ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.