இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தாங்கிய கப்பல் ஒன்று இன்று (29) இலங்கைக்கு வரவுள்ளது.
மருந்துகளை தாங்கி வரும் கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க இது பயன்படும் என்றும் அவர் தெரிவித்தா்ர.
மேலும், வெளிநாடுகளில் உள்ளவர்களிடமிருந்து பல்வேறு மருந்துகள் நன்கொடையாக பெறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.