அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (29) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் இறுதியில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார, இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி பதவி விலக விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
எனினும், இன்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல என தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியை தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.