இடைக்கால கிரிக்கட் குழுவை நீக்குமாறு கோரிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாவிட்டில், விளையாட்டுச் சட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வேன் என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (7) தெரிவித்தார்.
தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு விருப்பமான தீர்மானத்தை எடுக்குமாறு தான் கூறியதாக தெரிவித்த அமைச்சர், நியமிக்கப்பட்ட குழுவை ரத்து செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘வேலியிட்டது தோட்டக்காரன் என்றால் இந்தப் பிரச்சனையை யாரிடம் சொல்ல முடியும்’ என்ற பழமொழி இந்த நேரத்தில் நினைவுக்கு வருவதாகவும் ரொஷான் ரணசிங்க கூறினார்.