அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், 4 வயது பூர்த்தியடைந்த சகல பிள்ளைகளும் கட்டாயம் முன்பள்ளி கல்விக்கு செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.