Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பாறையில் ஒருவர் சுட்டுக் கொலை

அம்பாறையில் ஒருவர் சுட்டுக் கொலை

அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (06) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாயதுன்ன, வெரன்கடகாட சேர்ந்த 42 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ​​சிலர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

வயல் நிலம் தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles