நிதி மோசடி தொடர்பிy; நியகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 30 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.