Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீதாவக்க ஒடிசி ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்

சீதாவக்க ஒடிசி ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்

சீதாவக்க ஒடிசி ரயில் சேவை நாளை முதல் வார இறுதி நாட்களில் மீண்டும் முன்னெடுக்கப்படுமென மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

அண்மைய சீரற்ற வானிலை காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதன்படி, நாளை முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ரயில் நாளை காலை 8.25 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பி்ன்னர் மாலை 6.50 க்கு அவிசாவளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles