நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த நெல் தொகை திருடப்பட்டமை தொடர்பில் நான்கு களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள் நால்வரே சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மொத்த கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.