கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலினால் 15 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.