Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாணக்கியனுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

சாணக்கியனுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

களுவாஞ்சிக்குடி காவல்துறையினரை் செய்த முறைப்பாட்டுக்கு இணங்க, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Keep exploring...

Related Articles