Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு சட்டவிரோத பொருட்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத பொருட்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு

தமிழகத்தின் – ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதற்கமைய, கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான நான்கு இலங்கை படகும் அதில் இருந்த 8 பேரையும், அதேபோன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 4 பேரையும் மடக்கி பிடித்து நடுக்கடலில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடமிருந்து ஒரு தொகை கடலட்டை மட்டும் மஞ்சல் போன்றவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles