அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானாக்காவின் வீட்டிற்கும் அவரது தேவாலயத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அங்கு 20 காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இரவு பகலாக பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பில் காவல்துறை பேச்சாளரிடம் எமது செய்தி பிரிவு வினவியது.
சில பகுதிகளில் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவ்விடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.