கொலன்னாவ மொரவாடிய பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவர்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று விடுக்கப்பட்ட 1 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.