உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடம் இலங்கை தொடர்பான முக்கியமான கோரிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார்.
இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவித்து யுக்ரைனுக்கு வழங்குவதைப் போல அதிக கடன் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
இதிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து நிர்மலா சீதாராமன் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.