Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

1,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபரவெவ குளத்திற்கு அருகில் நேற்று (18) விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, 5 போலி 1,000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெபரவெவஇ கெமுனுபுர வீதியில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles