பிரதி சபாநாயகர் பதவிக்கான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதா ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தாலும், இன்னும் அவர் அதனை ஏற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மே 4 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ள நிலையில், இதன்போது பிரதி சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.