இரத்த சேகரிப்புப் பைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக இரத்தம் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தத்தை சேகரிக்கும் நான்கு வகையான பைகளில் ஒன்றிற்கு மாத்திரம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சுகாதார பிரிவுகள் இந்த இரத்த சேகரிப்பு பைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதால் விரைவில் அவை கிடைக்கும் என நம்புவதாக இரத்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.