எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கோழியிறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கால்நடை சபையின் தலைவர் மஞ்சுள சுமித் மாகமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1500 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
கால்நடைகளுக்கான உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளது.