லூட்டன் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், வாகன நிறுத்துமிடம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.
இந்த தீயினால் சுமார் 1200 கார்கள் எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையினால் நண்பகல் 12 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் 5க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.