தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன ஊடக நிகழ்ச்சி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
வைத்தியசாலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளதா என தொகுப்பாளர் வினவிய போது, அதில் பிரச்சினை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர், மேலதிக நேரச் சம்பளம் (OT) கூட குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.
இடைக்கால பாதீடொன்றை அமுல்படுத்தாவிடின் இந்நிலைமை மோசமாகி விடும் என அவர் சுட்டிக்காட்டினார்.