Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 தரமற்ற மருந்துகள் - அறுவை சிகிச்சை கருவிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

8 தரமற்ற மருந்துகள் – அறுவை சிகிச்சை கருவிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

ஒரு மாத காலப்பகுதியில் மேலும் எட்டு குழும மருந்துகளும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் தரம் குறைந்தவை என உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக வைத்தியசாலைகளில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகத் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் ஏழு மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மற்றைய மருந்து அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.

அவற்றில் மருத்துவ இரசாயன கலவை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க விடுத்துள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பத்து மாதங்களில் ஒன்பது வகை தரம் குறைந்த மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பயன்பாட்டை நீக்க அல்லது தற்காலிகமாக நிறுத்த மருத்துவ விநியோகத் திணைக்களம் முடிவு செய்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles