செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஜனாதிபதி தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கச் செலவு 3,860 மில்லியன் ரூபாவாகும்.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 203 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட செலவு 3,657 மில்லியன் ரூபாவாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2024 இல், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு மிகப் பெரிய தொகையாக 886 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles