நேற்று (27) இரவு 125 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் தப்பி சென்றுள்ளதாக யாழ்.காரைநகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் கடற்பகுதியில் கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை சோதனையிட முயன்ற போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 125 கிலோ கிராம், எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.