அம்பலாங்கொடை – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மீட்டியாகொட, மாகவெல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் அம்பலாங்கொடை, பனியனை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
அத்துடன், அவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை அம்பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.